சிக்கிம் மாநிலம் யூக்சோம் நகரத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள யூக்சோம் நகரில் இன்று (13-02-2022) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவிக்கையில், யுக்சோமில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு 12.52 மணிக்கு 3.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
“பொன்னியின் செல்வன்-2” – டிரைலர் மற்றும் இசை எப்போது ரிலீஸ்?