Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கமே வழங்கவில்லை - அமைச்சர் பி.டி.ஆர்

    அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கமே வழங்கவில்லை – அமைச்சர் பி.டி.ஆர்

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் வழங்கவில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

    மதுரை மத்தியத் தொகுதி கணேசபுரம் தெருவில், நேற்று 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பரவர் பிளாக் சாலையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். 

    அப்போது நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:

    வளர்ச்சி, நிதி மேலாண்மை ஆகியவற்றைவிட மனிதாபிமானம் மிகமுக்கியம். அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து பணியாற்றி வருகிறது

    எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் மனிதவள மேலாண்மை துறையில் தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டுள்ளது.

    இதையும் படிங்க : திமுக ஆட்சியில் அராஜகம் அதிகரிப்பு – வி.கே சசிகலா

    இவற்றில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு வழக்குகள் குவிந்து வந்துகொண்டிருக்கிறது. அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. விரைவில் விளைவுகளைச் சந்திப்பார்கள்.

    தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசி வருகிறார். குறிப்பாக அவர், சிறந்த ஆன்மீகவாதி, முன்னாள் முதல்வருக்கு கோவில் கட்டி சில ஆண்டுகள் செருப்பு கூட போடாமல் இருந்தவர். தற்போது, அவர்களை மறந்தது போல் உள்ளார். அமைச்சராக இருந்தவர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையுடன் ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது.

    குறிப்பாக, இலவச லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கல் திட்டம் உள்ளிட்டவைகள் அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர். இந்நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்று பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்ததால், அதிகப்படியான மனுக்கள் குவித்தது.

    திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை சொல்கிறார்கள் என்று சொல்வது நம்பமுடியாத ஒன்று. பொய்யான தரவுகள், அடிப்படை புரிதல் இல்லாமல் மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பேசுவது சரியானது இல்லை.

    நிதிநிலைமை சீர் செய்வது என்பது வருவாயில் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதே ஆகும் . எட்டு வருடம் அதிமுக ஆட்சியில் சரியவிட்ட வருவாய் பற்றாக்குறையை, மூன்று நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....