தீபாவளி விடுமுறைக்காக மூன்று நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயலூரில் உழைக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் பேருந்துகள் பற்றாக்குறை, கூட்ட நெரிசல் என பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த இன்னல்களை தவிர்க்க தமிழக அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து விடுமுறை வருவதால், 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. சென்னையில் உள்ள வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விபத்தை தடுக்க பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்: தமிழக அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு