மிசோரமில் கல் குவாரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெற்கு மிசோரம், ஹனாதியால் என்ற கிராமத்தில் நேற்று பிற்பகலில் கல் குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென குவாரி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. கல்குவாரியில் வேலை செய்தவர்கள் மிசோரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து மிசோரத்திற்கு வேலைக்காக சென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குவாயியில் தொழிலாளர்கள் கற்களை உடைத்து சேகரிக்கும் சமயத்தில் குவாரியில் உள்ள தளர்வான மண் சரிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் அறிந்து வந்த மாவட்ட அதிகாரிகளும், மருத்துவ குழுவினரும் மீட்பு பணியிலும் முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். மேலும், தன்னார்வலர்களும் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை காணாமல் போன விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The Incident of #Mizoram happened #BSF reached the spot and rescued many injured people from the place. #RealHero
Salute BSF🙏 Om Shanti#JaiHind #SajidKhan #LoveJihad Abdul#SajidKhan pic.twitter.com/41LDicnwfp— Anuj Kumar 💯% Follow Back. (@Anujk1180) November 15, 2022
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்திய ஆஸ்த்திரேலியா