Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விபத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி போட்ட ட்விட்!

    விபத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி போட்ட ட்விட்!

    பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு தற்போது ட்வீட் செய்துள்ளார். 

    நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. 

    இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது. 

    இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி உடல்நிலைக் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. 

    இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர்  விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார். ‘அன்பான நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படத்தில் நடிக்கும்போது, ஏற்பட்ட விபத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான தாடை மற்றும் மூக்கு தற்போது சரியாகி வருகிறது. பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடன் பேச உள்ளேன். உங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். 

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....