பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு தற்போது ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி உடல்நிலைக் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
Dear friends, I am safely recovered from a severe jaw and nose injury during Pichaikkaran 2 shoot in Malaysia.
I just completed a major surgery.
I will talk to you all as soon as possible😊✋
Thank you for all your support and concern for my health🙏❤️ pic.twitter.com/YJm24omxrS— vijayantony (@vijayantony) January 24, 2023
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார். ‘அன்பான நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படத்தில் நடிக்கும்போது, ஏற்பட்ட விபத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான தாடை மற்றும் மூக்கு தற்போது சரியாகி வருகிறது. பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடன் பேச உள்ளேன். உங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை