புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 5,433 -ஆக இருந்த நிலையில், இன்று 5 ,383 -ஆக குறைந்துள்ளது .
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5 ,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,58,425 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,28,449 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 ,39,84,695 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217,26 ,27,951 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.