Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று ..மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

    இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று ..மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,395 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நேற்று முன்தினம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 417 ஆக குறைந்த நிலையில் ,நேற்று மீண்டும் அதிகரித்தது.இதனையடுத்து 5,379 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

    இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி , இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 395 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும், இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,78,636 ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது .

    அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு உள்ளான 33 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாகவும் ,இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,28,090 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்று 6,614 பேர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ,இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,00,204 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 50,342 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , இந்தியாவில் இதுவரை 2,14,27,81,911 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,31,977 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,25,602 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,83,94,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....