காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் சந்தித்து அன்பை பரிமாறிக்கொள்ளவர். பலர் தங்களின் காதலை வெளிப்படுத்துவர். மேலும் பல இடங்களில் கேளிக்கை விருந்துகளும் நிகழ்ச்சிகளும் இதற்கென பிரத்யேகமாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து அரசு ஒரு புதிய முயற்சியை அந்நாட்டு ஆண்களுக்கு பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு, 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்து இருக்கிறது.
மேலும், பாலியல் தொற்றுப் பரவல் மற்றும் இளம் வயதில் கருவுறுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆணுறைகள் வழங்கப்படுவதாக தாய்லாந்து நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
விரும்பும் அளவு ஆணுறைகளை வாங்கி கொள்ளலாம் என்றும், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் ஆணுறைகள் இலவசமாக கிடைக்கும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு