Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'வெடி பொருட்கள் வாங்கியது எப்படி?' - கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணை

    ‘வெடி பொருட்கள் வாங்கியது எப்படி?’ – கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணை

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் 2-வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபீன் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26, அப்சர்கான் வயது 28 ஆகிய 6 நபர்களை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் தொடர்புடைய உறவினர்கள் மற்றும் சந்தேகமாக இருக்கும் இடங்களிலும் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. 

    இதனிடையே இந்தச் சம்பவத்தில் கடந்த 8 ஆம் தேதி, கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் வயது 25, பெரோஸ்கான் வயது 28 மற்றும் நீலகிரி, குன்னூரைச் சேர்ந்த உமர் பாருக் வயது 39 ஆகிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று பூந்தமல்லியில் இருக்கும் தேசிய சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களும் புழல் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    இந்நிலையில் முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பரூக், பெரோஸ்கான் அப்சர்கான் ஆகிய 5 நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி தேசிய சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி அவர்களை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

    வெடி பொருட்கள் எப்படி வாங்கினார்கள் என்பது குறித்தும் வேறு எங்கேனும் இதுபோன்ற திட்டம் இருக்கிறதா என்பது குறித்த பல்வேறு விசாரணைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

    நாட்டில் உயரும் கொரோனா தொற்று; இன்று ஆலோசனை கூட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....