பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இருந்து வந்த பத்திரிக்கை செய்திக்கு பதில் விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், அறிவாலய வாசிகளை கைப்பற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா என தமிழக காவல்துறையிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை காவல்துறை மறுக்குமா?
21 ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?
23 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு, காவல்துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவிக்காமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?
இவ்வாறு, அவர் தெகிரிவித்துள்ளார்.
நேற்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து வந்த பத்திரிக்கை செய்திக்கு பதில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தேன்.
அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா? (1/3) pic.twitter.com/CyJcEUvlea
— K.Annamalai (@annamalai_k) October 30, 2022
மேலும், பல்வேறு தகவல்களை அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திடீரென 50 மீட்டருக்கு உள்வாங்கிய கடல் நீர்: சுனாமி வருமோ என்று அச்சமடைந்த மக்கள்…!