Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அஜித்குமாரின் தந்தை மறைவு; இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    அஜித்குமாரின் தந்தை மறைவு; இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வி.கே.சசிகலா போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    தென்னிந்திய நடிகர்களின் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்ரமணியம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 84-ஆவது வயதில் காலமானார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா பிரபலங்களும், அஜித் ரசிகர்களும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில்,

    “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!” என்று பதிவிட்டுள்ளார்.

    வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு; இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....