Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! இரண்டு பேர் கைது

    10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! இரண்டு பேர் கைது

    சென்னையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் தடையை மீறி சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    இந்நிலையில், சென்னை செங்குன்றம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை மணிப்பூரில் இருந்து வாங்கி, இங்கு விற்க முயன்ற இரண்டு நபர்களை ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 9 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    இந்தப் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு கார், பைக், 4 செல்போன்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

    மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மணிப்பூரில் இருந்து போதைப்பொருட்களை யார் அனுப்பியது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    நடிகர் அஜித்குமாரின் தந்தை இயற்கை எய்தினார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....