ராசிபுரத்தில் அரசு பேருந்தில் செல்லாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு நடத்துனரிடம் சண்டையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரவல்லி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, மது போதையில் பேருந்தில் ஏறிய ஒரு நபர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயணச் சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. அப்போது மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை தாக்கினார்.
இதைத்தொடர்ந்து, கீழே இறங்கிய நடத்துனரும் மது போதையில் இருந்தவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குடி போதையில் இருந்தவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராசிபுரம்:போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு அரசு நடத்துனரை தாக்கிய மதுபிரியர். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல்.@sunnewstamil #rasipuram #viralvideo pic.twitter.com/8UhOFdQ4ED
— GOWRISANKAR B (@b_gowrisankar22) October 12, 2022
இதையும் படிங்க:‘உயர்மட்ட தலையீடுகள்’ அதிகம்.. நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்தப்படுமா?