நான் தான் விலகி இருக்கிறேன்; அரசியல் என்னை விட்டு விலகவில்லை என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கி, அதில் சிரஞ்சீவி உட்பட மாநிலம் முழுவதும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, சில காலங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினராக சிரஞ்சீவி வலம் வந்தார்.
இதன்பிறகு, சில காலம் அரசியல் வாழ்வில் இருந்து விலகி இருந்து, மீண்டும் திரை உலகிற்கு வந்தார். மேலும், அரசியல் கட்சி தலைவர்களின் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ‘நான் தான் விலகி இருக்கிறேன்; அரசியல் என்னை விட்டு விலகவில்லை’ என நடிகர் சிரஞ்சீவி பேசிய ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திரைப்பட விளம்பரமா? அல்லது தனது தம்பியின் அரசியலுக்கு வலு சேர்ப்பதற்காக இப்படி செய்கிறாரா என சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கார் வாய்ப்பை தவறவிட்ட ‘இரவின் நிழல்’! இந்தியா சார்பில் தேர்வான படம் எது தெரியுமா?