தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது :
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று அவர்
பதிவிட்டுள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில் தயாராகி வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.