செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் இடது புறப் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.