Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பலி!

    செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பலி!

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் இடது புறப் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....