Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று (19.12.2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச 19) தொடங்கி வரும் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யகூடும்.

    இதேபோல் வரும் டிச 22-ம் தேதிகளில் தமிழக கடலோ மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் வரும் 23-ம் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ‘காசேதான் கடவுளடா’ – வெளிவந்த அஜித்குமாரின் துணிவு பாடல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....