தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான டிஜிட்டல் தனி உரிமையை பாதுகாக்க வழி வகை செய்யும், தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையிலும், ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்கு பொருந்தாத வகையிலும் புதிய மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், இந்த மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த மசோதாவை மிக விரிவாக பரிசீலித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் வழங்கி இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடிப்படையில் ஒருங்கிணைத்த சட்ட வழிமுறைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி- மத்திய அரசு