சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தலில் ஈடுப்டடவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிலை தடுப்பு பிரிவினர் மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் பொய் வழக்குத் தொடுத்தார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை, சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற துணைக் காவல்கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா அளித்திருந்தார்.
முன்னதாக, இந்த புகார் மனுவை சிபிசிஐடி விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என காதர் பாட்ஷா தரப்பிலிருந்து கோரிக்கை வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடவுள் சிலைகளைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட துணைக் காவல்கண்காணிப்பாளர் ஆக இருந்த காதர்பாஷா பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்