Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; தமிழிசை சௌந்தரராஜன்

    லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; தமிழிசை சௌந்தரராஜன்

    புதுச்சேரியில் அருள்மிகு மணக்குள விநாயகரை தரிசிக்க வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். யானை லட்சுமி மறைவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யாணை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது.

    மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது. பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யாணை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யாணைக்கு அஞ்சலி செலுத்த கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். தற்போது மணக்குள விநாயகர் கோவில் எதிரே யானை லட்சுமி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் யானை லட்சுமிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை லட்சுமி உயிரிழந்த்து காரணமாக மணக்குள விநாயகர் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தி என்றும், தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி யானை லட்சுமி செல்லும், லட்சுமியின் இழப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது.

    லட்சுமியை அடக்கம் செய்ய அரசு துனை நிற்கும் என்றும் , யானை சரியான முறையில் பாதுகாக்கப்பட்டது, இதய அடைப்பு காரணமாக யானை லட்சுமி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தாக துணை நிலை ஆளுநர் தமழிசை தனது பெட்டியில் தெரிவித்துள்ளார்.

    நடைப்பயிற்சி மேற்கொண்ட மணக்குள விநாயகர் கோவில் யானை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....