சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13 வரை இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்கள். மேலும், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.
மேலும், இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, ஆர். அஸ்வின், சஹால், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
மாற்று வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார்.
இதையும் படிங்க: முதன் முதலாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்காரஸ்…