பிரேசில் அணி தென் கொரியா அணியை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து, நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நள்ளிரவு 12.30 மணி நாக்-அவுட் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகள் மோதிக்கொண்டன. உலகளவில் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் காயம் குணமாகி மீண்டும் உலக் கோப்பை போட்டியில் பங்கேற்பது பெரிய எதிர்பார்ப்பை இந்த ஆட்டத்தின் மீது வரவழைத்தது.
இந்த ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஜூனியர் ஒருகோல் அடித்து பிரேசில் அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் நெய்மர் ஒருகோல் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து ஆட்டத்தின் 29-வது மற்றும் 36- வது நிமிடத்தில் ரிச்சார்லிசன் ஒரு கோலும், லூகஸ் ஒரு கோலும் அடித்து பிரான்ஸ் அணிக்காக கோல் மழை பொழிந்தனர். இதன் மூலம், 4-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை வகித்தது.
தென்கொரியா அணியிடமிருந்து ஒரு கோல் கூட வராத நிலையில், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் பால்க் ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார்.
ஆட்டத்தின் இறுதியில் 4:1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியது.
புரோ கபடி: ஒரே புள்ளிகளை பெற்று வெற்றிப்பெற்ற இரு அணிகள்..பிளே ஆஃப் சென்ற ஜெய்பூர்