காரைக்காலில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் காவலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியை அடுத்த இராயன்பாளையத்தில் மத்திய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பல பகுதியில் இருந்தும் மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இதே பள்ளியில் நாகை மாவட்டம், தரங்கம்பட்டியைச் சேர்ந்த முகமது அலி கடந்த 10 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் அவர் மாணவர்களை எழுப்ப சென்றார்.
அப்போது அப்பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு அந்தக் காவலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவனின் அலறல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த மாணவர்கள் விழித்து கொண்டனர்.
உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டுச்சேரி காவல்துறையினர் முகமது அலியை கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடு! ஈபிஎஸ்-ஐ நெருங்கும் லஞ்ச ஒழிப்புத் துறை