Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆற்றில் கிடந்த 7 உடல்கள்; கொலையா? தற்கொலையா?

    ஆற்றில் கிடந்த 7 உடல்கள்; கொலையா? தற்கொலையா?

    புனேவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஜனவரி 18 ஆம் தேதி புனேவில் இருக்கும் என்ற பரகான் என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் பீமா ஆற்றில் மனித உடல் ஒன்று மிதப்பதாக புனே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். 4 நாட்களாக தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டதில், அங்கிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக புனே காவல்துறை தரப்பில், அந்த உடல்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என தெரிவதாகவும், அவர்கள் அனைவரும் தற்கொலை செய்திருப்பதாக தெரிவதாகவும், இருப்பினும் எதையும் முடிவாக சொல்ல முடியவில்லை என்றும், முழு விவரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆற்றில் மீட்கப்பட்ட உடல்களில் 4 பேரின் உடல்கள் பெரியவர்கள் என்றும் மற்றவை குழந்தைகளின் உடல்கள் என்றும் தெரியவந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட இறந்தவர்களின் ஒருவரது உடலில் இருந்து செல்போன் இருந்ததால் அதனை வைத்து அனைவரையும் அடையாளம் காண முடிந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....