பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்தன் மிஸ்ரா பள்ளியில் கழிவறையை எவ்வித உபகரணங்களும் இன்றி வெறும் கைகளாலேயே சுத்தம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், கட்கரி கிராமத்தில் உள்ள மகளிர் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சியில் நேற்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்தன் மிஸ்ரா கலந்து கொண்டார்.
மரம் நடும் நிகழ்ச்சிக்கு பின் பள்ளியில் உள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதை கண்ட அவர், உடனே ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றார். பிறகு ஜனார்தன் மிஸ்ரா தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் தீவிர ஆதரவாளரான ஜனார்தன் மிஸ்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியின் கழிவறையும் இதேபோன்று சுத்தம் செய்தார்.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில், கழிவறையில் வைக்கப்பட்ட உணவு கபடி வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்! பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
हे आहेत मध्य प्रदेशमधील भाजप खासदार जनार्दन मिश्रा… खासदार महोदय चक्क हाताने टॉयलेट स्वच्छ करतायत… मुळात इतका दिखावा करण्याची गरज काय..?#JanardanMishra #Toilet #BJP_MP #दिखावेपणा @Janardan_BJP pic.twitter.com/UpLE0doyXr
— Harshal Jadhav (@harshal_rj) September 24, 2022