Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக பிரியும், இந்தியாவில் 50 மாநிலங்கள் வரும் - பாஜக...

    தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக பிரியும், இந்தியாவில் 50 மாநிலங்கள் வரும் – பாஜக அமைச்சர் பேட்டி

    2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 மாநிலங்களாகவும் உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படும் என்று கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

    கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டா மாநிலங்கள் பிரிவினை தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. பொது வினியோகம், உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படுகிறது. புதிதாக மராட்டியத்தில் 3 மாநிலங்கள், கர்நாடகத்தில் 2, உத்தரபிரதேசத்தில் 4 என நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பெலகாவியில் விகாச சவுதா உள்ளது. தார்வார் ஐகோர்ட்டு கிளை இருக்கிறது. பெலகாவியில் நுகர்வோர் கோர்ட்டு அமைக்கப்படுகிறது.

    மாநிலம் பிரிக்கப்பட்டால் வட கர்நாடகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். நாம் அனைவரும் சேர்ந்து வட கர்நாடகத்தை தனி மாநிலமாக ஆக்குவோம். பெங்களூரு முழுவதுமாக நிரம்பிவிட்டது. பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இருந்து எனது வீடு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வீட்டில் இருந்து விதான சவுதாவுக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அதனால் வளர்ச்சியை பரவலாக்க வேண்டியது அவசியம். அதனால் கர்நாடகம் அவசியம் பிரிக்கப்பட வேண்டும். இவ்வாறு உமேஷ்கட்டி கூறினார்.

    மந்திரி உமேஷ் கட்டி இதே கருத்தை தட்சிண கன்னடா மாவட்டத்திலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உமேஷ்கட்டியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள காகித பஞ்சம்!! அடுத்த இலங்கையாக மாறிவருகிறதா??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....