Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டத்தடை.. பசுமை தீர்ப்பாயம்

    தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டத்தடை.. பசுமை தீர்ப்பாயம்

    தாமிரபரணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணித் துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியை பெறும் வரை தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும். தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடமிருந்து பெற வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணி துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்படுவதாக கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்படி சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....