கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திய தாக்கமே இந்த உலகத்தில் இன்னும் நீங்காத நிலையில், தற்போது புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் கண்டறிய ப்பட்டுள்ளது.
மேலும் இதன் தாக்கம் அமெரிக்காவில் கடுமையாக இருக்கும் நிலையில், தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. குறிப்பாக பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தனது பரவலை அதிகப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: பார்வையை இழக்கப் போகும் பிள்ளைகள் – சொத்தையே இழந்து பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
இது ஓமைக்ரான் B.A.5 இன் அடுத்த வகை வைரஸ் ஆகும். இதன் உருவாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் ஒருவிதத்தில் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஏனெனில் இதன் பரவல் தான் வீரியமாக இருக்குமே தவிர உயிரிழப்பு இதுவரை பதிவாகவில்லை. மேலும் மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
எனவே மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.