அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த தானியங்கி பயணச்சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, இக்யூஆர் கோடு ஆகியவற்றை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ரயில் விபத்து; 50-க்கும் மேற்பட்டோர் காயம்..