Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராணுவ வீரருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்; நடந்தது என்ன?

    ராணுவ வீரருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்; நடந்தது என்ன?

    தில்லியில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வேகமாக பரவி வருகிறது. 

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குரு. இவர் தற்போது தில்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து காணொளி ஒன்றை வெளியிட்டார். 

    அந்தக் காணொளியில், தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனுக்கு எனது கேள்வி இதுதான்; தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? ஒரு நாடு மாதிரி தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்.

    இதற்குதான் நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும் தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமா? நாட்டை இரண்டாகவும் மூன்றாகவும் பிளக்கத்தானா? 

    இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கத்தான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமே, தவிர நாட்டை பிரித்து பார்ப்பதற்கு இல்லை. உங்கள் சுயநிலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பீர்கள். அதன் பிறகு மாவட்டத்தை பிரித்து கொடு என்று சொல்வீர்கள். 

    எந்த தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என கேட்கிறீர்கள்? தனி தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு உங்களை இவ்வளவு தூரம் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு ஆகும்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசிவிடுவீர்களா? நாட்டுப்பற்றை வளர்க்க போராடிக் கொண்டிருக்கும் நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? 

    நீங்கள் ஒரு நாள் வீதியில் நின்று தனித்தமிழ்நாடு வேண்டும் என போராடி பாருங்கள். உங்கள் வாயால் வந்தே மாதரம் சொல்ல வைப்போம். 

    இவ்வாறு, அவர் அந்தக் காணொளியில் பேசியுள்ளார். 

    இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதன் காரணமாக விசிகவைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் ராணுவ வீரர் குருவை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    விசிகவின் கடலூர் மாவட்டம் லத்தூர் ஒன்றிய செயலாளராக இருக்கும் மணிமாறன், நீ எவ்வாறு திருமாவளவனை தரக்குறைவாக பேசலாம்? நீ பேசுனது தப்பு. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேள் என ராணுவ வீரரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. 

    இதற்கு அந்த ராணுவ வீரர், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான்காரனின் துப்பாக்கியும், பீரங்கியும் காட்டினாலே பயப்பட மாட்டோம். நீங்க இப்படி போன் போட்டு மிரட்டினா பயந்துடுவோமா? நான் யாருக்கும் பயப்படமாட்டேன்; மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று பதில் கூறியுள்ளார். 

    இதற்கு அந்த விசிக பிரமுகர், நீ தில்லில இருக்குற, ஆனா உன் குடும்பம் எல்லாம் தமிழ்நாட்டுல தான இருக்காங்க… அவங்க எல்லாரும் உயிரோட இருக்கணும்னா மன்னிப்பு கேள் என்று மிரட்டியுள்ளார். மேலும் விசிக பிரமுகர்களும் நிர்வாகிகளும் ராணுவ வீரரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த சம்பந்தமான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    இதனிடையே, பாஜக மாநிலத்து தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசத்தை காப்போரை மிரட்டி விட்டு தப்பி விடலாம் என்று தமிழகத்திலே ஒரு அரசியல் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.

    CRPF வீரர் சகோதரர் குருவிடம் தொலைப்பேசி மூலமாக உரையாடினேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாஜக துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....