Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மதுரை ஆதீனத்திற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - அர்ஜுன் சம்பத் பேட்டி!

    மதுரை ஆதீனத்திற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – அர்ஜுன் சம்பத் பேட்டி!

    ஹிந்து சமயத்திற்கு பிரச்சனை என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார். அதற்காக அவர் அ.தி.மு.க., பா.ஜ., ஆதரவாளர் கிடையாது. அவருக்கும், அரசியலுக்கும் தொடர்பு கிடையாது” என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

    மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன் சம்பத் மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுரை ஆதீனம் அவர்கள் தற்போது அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். மதுரை ஆதீன மடத்திற்கு குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்கிறார் என்றும் நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலை துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்தி வருகிறார். இது ஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது அவர் அரசியல் பேசவில்லை.

    இந்து சமய நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. திரைப்படங்களில் இந்து மத சமய கடவுள்களை இழிவு படுத்தப்படுகிறது. இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார். அதிமுகவிற்கு ஆதரவா இருப்பார் பிஜேபி ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது.

    அவரது கருத்து அரசியல்வாதிகளுக்கோ, விஜய்க்கோ எதிரானது அல்ல. விஜய் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் ஆதினத்தை விமர்ச்சிக்கின்றனர். அவர்களுக்கு விஜய் அறிவுரை கூறவேண்டும். சு.வெங்கடேசன் தொடங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் பல்வேறு அருவருக்கத்தக்க கருத்துக்கள் பேசப்பட்டுள்ளது. இது, கண்டனத்துக்குரியது. இதனால், மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு முழுவதும் பொய்யான ஒன்று. இந்து மத சமய நம்பிக்கைகள் சீர் குறைவதும் கோயில்கள் அறநிலையத் துறையின் பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய கருத்து இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்.இதனை மதுரை ஆதீனம் அதிமுக காலகட்டங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும், இருக்கின்ற போது ஏன் ஆலய சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். எங்களது உரிமைக் குரலாக ஆதீனம் இருந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

    அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு திவாகரன் சொன்ன செய்தி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....