தான் கணித்தபடியே உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகப்கோப்பை கால்பந்து தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலபரீட்சை நடத்தின. இந்தப்போட்டி மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெற்றது.
அதன்படி ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்தன. இதன் காரணமாக போட்டியின் முடிவை தெரிந்துகொள்ள பெனால்டி ஷூட்-அவுட் முறை நடைபெற்றது.
இந்த முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி மெஸ்ஸி இடம்பெற்ற அர்ஜென்டினா அணி வெற்றி வாகை சூடியது. அர்ஜென்டினா அணியின் வெற்றியை அவ்வணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தான் கணித்ததுபடியே உலக கோர்ப்பையை அர்ஜென்டினா அணி கைப்பற்றியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் அவர், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டியை தனது செல்போனில் கண்டுகளித்தார்.
#வடசென்னை முன்னாள் #கால்பந்தாட்ட வீரர் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் #மெசி தலைமையிலான அர்ஜெண்டினா அணியே ஃபிபா உலககோப்பை கால்பந்துபோட்டியை கைப்பற்றும் என ஏற்கனவே கணிந்திருந்தேன்,என சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார்@offiofDJ @AIADMKOfficial @FIFAWorldCup @Journalist_guna pic.twitter.com/RIQGd7lDWW
— Nowshath A (@Nousa_journo) December 18, 2022
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. அபார வெற்றிப் பெற்ற இந்தியா!