நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 50-ஆவது படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
மேலும், இப்படமானது க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்தி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனுராக் காஷ்யப், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் நடித்திருந்தார்.
பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
வெளியானது, பொன்னியின் செல்வன் பாடலின் வீடியோ..