Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

    சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

    சென்னையில் நாளை  (டிசம்பர் 17) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த டிசம்பர் மாதம் கடந்த 9 ஆம் தேதி மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர். 

    அந்த வகையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் கடந்த 9 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை ஈடு செய்யும் விதமாக நாளை (டிசம்பர் 17) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதே சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை  (டிசம்பர் 17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி தவிர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும்; மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....