தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஃபீனிக்ஸ் பறவைக்கு இணையானவர் குஷ்பூ என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ, அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் அவர் பங்கேற்ற பெண் மைய நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பூ கூறியவைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதன்படி, தனது 8 வயதில் தொடங்கி 15 வயது வரை பெற்ற தந்தையின் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக குஷ்பூ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். தன்னுடைய புகாரை பெற்ற தாய்கூட புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குஷ்பூ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், ‘சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஃபீனிக்ஸ் பறவைக்கு இணையானவர் குஷ்பூ. குழந்தைப் பருவத்தின் அதிர்ச்சியை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு, இந்த உயரத்தை நீங்கள் எட்டியிருப்பது சாதாரணமானதல்ல. மென்மேலும் உங்களுக்கு சக்தி சேரட்டும் குஷ்பூ அக்கா’ என்றும் வாழ்த்தியிருக்கிறார்.
‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறாரா கரு.பழனியப்பன்- அதிர்ச்சி தகவல்..