அரக்கோணம் அருகே இருக்கும் கோயில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலி கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார், ஜோதிபாபு, பூபாலன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்று வந்த பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உயிரிழந்தார். இதன்காரணமாக கோயில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நெமிலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Three killed when a crane crashed in temple fest in Keezhveedhi village near Nemili, Arakonam . pic.twitter.com/1GXuDlBcpW
— Saurabh Upadhyay (@saurabhaindian1) January 23, 2023
‘ஒரு பொண்ணுக்காகவா இவ்ளோ பண்ற ?’ – வெளியானது “மைக்கேல்” டிரைலர்..