அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை 11:05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2:54 மணியளவில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 244 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று காலை 5.57 மணியளவில், மீண்டும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 215 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் தொடர்ந்து 20 முறை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு மதத்தினர் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!