அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில், ஒரே நாளில் அடுத்தடுத்து 13 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை 11:05 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது.
இதனைத் தொடர்ந்து, அந்தமான் தீவுகளில் அடுத்தடுத்து பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில், இன்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை, 12:03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12:46, 1:07, 1:30, 1:48, 2:13, 2:34, 5:57, 8:05 என அடுத்தடுத்து இதுவரை 10 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரண்டு நாள்களில் 23 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று உண்ணாவிரதம்!