Monday, May 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஊழியரிடம் நலம் விசாரித்த அஜித்... "நீங்க நல்லா இருக்கணும்" என ஆசி வழங்கிய பாட்டி -...

    ஊழியரிடம் நலம் விசாரித்த அஜித்… “நீங்க நல்லா இருக்கணும்” என ஆசி வழங்கிய பாட்டி – வைரல் வீடியோ

    நடிகர் அஜித்குமாரை ஒரு பாட்டி ஆசிர்வதிக்கும் காட்சி அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் மிக வேகமான முறையில் உருவாகி வருகிறது. பொங்கல் வெளியிடாக, துணிவு திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் சார்ந்த புரோமஷன் பணிகளை தற்போது தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக துணிவு திரைப்படம் சார்ந்த புரோமஷன்களில் அஜித்குமாரை வரவழைக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டது. ஆனால், அந்த முயற்சி எடுபடவில்லை. இந்நிலையில், அஜித்குமார் விமான நிலையத்தில் பயணிகளுடனும், ஊழியர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. குறிப்பாக, ஒரு பாட்டி அவரை ஆசிர்வதிக்கும் காட்சி பலரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும், இந்த காட்சிகள் தொடர்பாக விமான நிலைய ஊழியர் ஆசிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; 

    இதையும் படிங்க: கல்வான் மோதல் எதிரொலி: இந்திய வீரர்களுக்கு ஆயுதமில்லா போர் பயிற்சி..

    ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு அஜித் சார் வருகிறார் என்று, அவர் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரை அழைத்து வரும் பணி என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

    ஆதலால், அவரை அழைத்துச் செல்வதற்காக ஓய்வறையில் காத்திருந்தேன். அப்போது, அவர் வந்தார். உடனே வயதில் மூத்தவர்களிடம் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், லிஃப்ட்டை அவருக்காக நான் இயக்கினேன். அப்போது, என்னிடம் எந்த கல்லூரியில் படித்தாய்? குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்தார். 

    இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக வந்தனர். எவருக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் அஜித் சார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அவரே யாரேனும் புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்களா என கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

    இதன்பின்னர், அவரை கார் வரை சென்று வழியனுப்பினேன். அப்போது நன்றியும், மீண்டும் சந்திக்கலாம் என்றும் அஜித்குமார் தெரிவித்தார். 

    இவ்வாறாக  அவர் தெரிவித்துள்ளார்.

    துணிவு திரைப்படத்தையடுத்து, நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....