Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் கீழ் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் கீழ் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 4 நாள்களாக 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு இன்று 17 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

    இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    திங்கள் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக  16,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,37,67,534 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,760 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,069 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,97,510 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,44,264 ஆக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 4,46,617 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 200.04 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பை கண்டறிய  2,61,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,96,87,102 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வெடிவிபத்து- இரண்டு வீரர்கள் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....