எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியுள்ளார். கழக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அவையோரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பழனிசாமி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு உறுப்பினர்கள் மாலையும் பூங்கொத்துகளும் அளிக்க முயன்றனர்.
பழனிசாமியின் அறிவிப்பிற்குப் பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிர்ப்பிற்கு வழிமொழிவதாக கூறியுள்ளார். மேலும் ஒற்றைத்தலைமையின் நாயகன் என்று எடப்பாடி பழனிசாமியினைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு எம்ஜிஆர் – உடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட தமிழ்மகன் உசேன், ஒரு ஏழைத்தொண்டனும் அதிமுக கட்சியில் அமைச்சராகலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், அவைத்தலைவராக தேர்வு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்மகன் உசேன் அவர்கள் அடுத்த பொதுக்குழுவானது 11-7-2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
23 தீர்மானங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் தற்போது தீர்மானங்கள் குறித்த இரங்கல் பேச்சு மட்டுமே நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..23 தீர்மானங்களும் நிராகரிப்பா?