பொதுக்குழுவில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முழக்கமிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தலைவன் இருக்கிறான் அவன் கட்டாயம் வருவான் என்று எடப்பாடி குறித்து பேசியுள்ளார்.
அனைத்து உறுப்பினர்களும் 23 தீர்மானங்களையும் நிராகரித்து விட்டார்கள், அவர்களுக்கு ஒற்றைத்தலைமை மட்டுமே தேவை, ஒற்றைத்தலைமை குறித்த தீர்மானம் எப்பொழுது நிறைவேற்றப்படுகிறதோ அப்பொழுது மட்டுமே மற்ற தீர்மானங்கள் பற்றி பேசப்படும் என்று கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தற்போது தீர்மானங்கள் மீதான இரங்கல் உரை பேசப்பட்டுவருகிறது.
அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..கழகத்தின் பொதுச்செயலாளர் இபிஎஸ் என முழுக்கம்!