Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகை - வெளிவந்த அறிவிப்பு!

    14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகை – வெளிவந்த அறிவிப்பு!

    நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் நடிகை த்ரிஷா இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    கடந்த இரு நாட்களாக ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களையும், சினிமா துறையினரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

    இவர்களைத் தொடர்ந்து, ‘தளபதி 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக படக்க்ழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளனர். 

    முன்னதாக, கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற திரைப்படங்களில் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....