Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்''புதிய கதை, புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்'' - சமந்தா தந்தை உருக்கம்

    ”புதிய கதை, புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்” – சமந்தா தந்தை உருக்கம்

    நடிகை சமந்தாவின் தந்தை குறிப்பிட்டுள்ள பதிவொன்று வேகமாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தார். 

    இதைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். இதன்பிறகு, சமந்தாவும் சரி, நாக சைதன்யாவும் சரி பல்வேறு சர்ச்சைகளுக்கும், தனிப்பட்ட மன உளைச்சல்களையும் சந்தித்தனர். 

    இந்நிலையில், தற்போது சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் சமந்தா – நாக சைதன்யா ஆகியோரது திருமண புகைப்படங்கள் பகிர்ந்து உருக்கமுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கதை இருந்தது. மேலும் அது இனி இருக்காது. எனவே, ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

    இந்த பதிவானது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....