சமந்தா உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
மிகவும் பிஸியாக காணப்பட்ட சமந்தா சமீபத்தில், தான் மயோசிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவ உதவியால் இப்போது தேறி வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சமீபத்தில் வெளிவந்த யசோதா திரைப்படத்தின் புரோமஷன் பணிகளில் அவர் கலந்துக்கொண்டார். இந்நிலையில், தற்போது திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மயோசிஸ் நோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதனிடையே, சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படம், முதல் 10 நாள்களில் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால், சமந்தா மருத்துவமனையில் இல்லை, வீட்டில்தான் உள்ளார் எனவும் சமந்தா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் ; விலங்குகள் நலவாரியம் அதிரடி