நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முறையே இயக்கத்திலும் நடிப்பிலும் உச்சத்தை அடைந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இச்சூழலில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்தனர். திருமணம் முடிந்தப்பின் ஹனிமூன் சென்றுவிட்டு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாகினர்.
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என்று குறிப்பிட்டு இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார்.
Nayan & Me have become Amma & Appa❤️
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
இருவரும் குழந்தைகளை தத்து எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் பரவ, வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
எது எப்படியாக இருப்பினும், ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ரஷ்யா-உக்ரைன் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்- கவிஞர் வைரமுத்து