ஆதிபுருஷின் டீசரைப் பார்த்தபோது பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் ஏமாந்தேன் என தெலுங்கு திரையுலக நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.
பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் உலகளவில் கவனம் பெற்று வருகின்றன. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான், ‘ ஆதிபுருஷ்’. இந்தியாவின் பல மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் இணைத்து நடித்துள்ள இத்திரைப்படம் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான முதலே, சமூக வலைதளங்களில் பல்வேறு ட்ரோல்களுக்கு ‘ஆதிபுருஷ்’ உள்ளானது. மேலும், நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்தனர். மிகப்பெரிய ட்ரோல்களுக்கு ஆதிபுருஷ் உள்ளானது. இந்நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகராக இயங்கி வரும் விஷ்ணு மஞ்சு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆதிபுருஷின் டீசரைப் பார்த்தபோது பார்வையாளர்களுடன் சேர்ந்து தானும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது, ‘படத்தின் டீசருக்கு கிடைத்த எதிர்ப்பு என்பது இயல்பானதுதான். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் லைவ் ஆக்க்ஷன் மூவியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இது அனிமேஷன் படமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எல்லோரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அனிமேஷன் படம் என்று சொல்லிவிட்டு, டீசரை வெளியிட்டிருந்தால் ட்ரோல்களே வந்திருக்காது’ என்று விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.
இதனிடையே, 3டி தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆதிபுருஷ் டீசரை பாரத்தால் அதன் தன்மை மாறுபடும் என்று பலர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?