தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத் திரைத்துறையில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர்கள், திரைப்பட எழுத்தாளர்கள். ஆனால், அவர்களின் வாழ்வு மேம்பட்டதா என்றால் அது கேள்விக்குறியே. இந்நிலையில் இந்த கேள்விக் குறியை போக்கும் வகையில் திரைப்பட எழுத்தாளர்களுக்கு உதவு ஆரம்பிக்கப்பட்டதே திரைப்பட எழுத்தாளர் சங்கம்.
இந்த திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணியும், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். போட்டியின் இறுதியில் பாக்யராஜ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வந்தது புது வரவு… மகிழ்ச்சியின் உச்சத்தில் ரஜினிகாந்த்