Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரே தாய்க்கு பிறந்த 'இரட்டையர்கள்' ஆனால் தந்தையோ வேறு வேறு ?

    ஒரே தாய்க்கு பிறந்த ‘இரட்டையர்கள்’ ஆனால் தந்தையோ வேறு வேறு ?

    ஓர் இளம்பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இருவேறு
    அப்பாக்கள் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

    போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த 19 வயதான அந்த இளம்பெண், ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், கருவுற்றிருந்த அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. தன்னுடைய குழந்தைகளுக்கு இவர்தான் தந்தையாக இருக்கும் என ஒரு நபருடன் இருந்துள்ளார். பின்னர், டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்து, தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்தார்.

    அவற்றில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே உடனிருந்தவருடன் ஒத்துப்போனது. 

    அதன் பின்னர் தான், இன்னோர் ஆணுடனும் அதே நாளில் உடலுறவு கொண்டதை நினைவுகூர்ந்த அந்த பெண், இரண்டாம் நபரை அழைத்துள்ளார். 

    டி.என்.ஏ. பரிசோதனையில் மற்றொரு குழந்தை அந்த இரண்டாம் நபருக்குப் பிறந்தது தெரியவர அனைவரும் அதிசயப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரே வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் என்பது உலக அறிவியல் வரலாற்றில் அரிதான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

    இரண்டு குழந்தைகளும் பிறந்து இப்போது சுமார் 16 மாதங்களாகும் நிலையில், ‘இவ்வாறு நடக்கும் என்று எனக்குத் தெரியாது, நான் எதிர்பார்க்கவில்லை’ என்று அந்த பெண் கூறியுள்ளார்.

    மேலும் இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழிலும் ஒருவரது பெயரே தந்தை பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரே இரண்டு குழந்தைகளையும் வளர்க்கப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

    சோதனை மேற்கொண்ட மருத்துவர் இதுகுறித்து கூறியதாவது:

     ‘இது மிகவும் அரிதானது. அறிவியலில் இதனை ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் (heteropaternal superfecundation) என்று கூறுவார்கள். ஒரே மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலிலிருந்து இரண்டாவதாக ஒரு கருமுட்டை வெளியாகும்போது இவ்வாறு நிகழலாம். ஆனால், இதே காலகட்டத்தில் அந்தப் பெண் வேறு பலருடனும் உடலுறவு வைத்திருக்க வேண்டும்’ 

    இவ்வாறு தெரிவித்தார். 

    மேலும், உலக வரலாற்றில் இதுதான் முதல் முறையா என்றால் அப்படியில்லை. இதுபோல, உலகில் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருப்பது இதுவே முதல்முறை அல்ல, இது 20 ஆவது நிகழ்வு. பதிவு செய்யப்பட்ட மருத்துவ வரலாற்றில் ஏற்கெனவே, இவ்வாறு 19 முறை நடந்திருக்கிறது.

    இதையும் படிங்க: 100 ரூ கொடுத்தது குத்தமா? முடிவுக்கு வந்த வையாபுரியின் 8 ஆண்டுகால போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....