எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக மாறிய பிறகு வேறு பேச்சும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சி செய்தபோதுகூட அடுத்தடுத்த புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையை விட அதிக இழப்பீட்டுத் தொகையை அதிமுக வழங்கியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தந்தது தங்கள் தலைமையிலான அதிமுக அரசு தான் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்ததாகவும் ஆனால், 20 ரூபாய் தான் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும் முதல்வரான பிறகு வேறொரு பேச்சும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவதாக தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும், இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும், பாஜக கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி இருக்குமெனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சதமடித்த ரோஹித்சர்மா; நம்பிக்கையில் இந்திய அணி!